POs & PSOs

PROGRAMME OUTCOME

இளங்கலை தமிழ் இலக்கியம் - BA TAMIL LITERATURE

  • இளங்கலைதமிழ் இலக்கியப் படிப்பு பயில் வோரை, தமிழ் இலக்கண இலக்கியங்களில் ஆழ்ந்த புலமை மிக்கவர்களாகப் பயிற்றுவித்து, அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவது
  • இலக்கண இலக்கியங்களின் நுட்பங்களை அறிந்து, அவை சமூக வளர்ச்சிக்குப் பயன்படும் வகையில் மாணவிகளை உருவாக்குவது.
  • கவிதை, சிறுகதை போன்ற இலக்கிய வடிவங்களினூடே படைப்பளர்கள் வெளிப்படுத்திய சமூக விழுமியப் பதிவுகளை எடுத்தியம்பி, மேம்பாடுடைய சமூகத்தை அனைத்துத் தளத்திலும் ஏற்படுத்த மாணவிகளை வழிப்படுத்துவது.
  • பிறதுறை மாணவர்களைப் போல வளாகத் தேர்வில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெறச்செய்தல்

முதுகலை தமிழ் இலக்கியம் -MA.TAMIL LITERATURE

  • தமிழ் இலக்கிய இலக்கணத்தின் பல்வேறு நிலையினையும் ஒட்டு மொத்த பரப்பினையும் அறிந்து கொள்ளச் செய்தல்
  • ஆராய்ச்சி எண்ணங்களையும் திறனாய்வு மனப்பான்மையினையும் வளரச் செய்தல்.
  • மாணவியரை, கருத்தரங்குகளில் பங்கேற்கச் செய்து, தரம் வாய்ந்த கட்டுகளை உருவாக்கத் தூண்டுதல்
  • தமிழ்மொழியில் உயர்கல்வியைப் பெறச் செய்து மாணவிகளை அரசின் போட்டித் தேர்வுகளில் (TNPSC, UPSC, NET,SET) கலந்து கொள்ள ஊக்குவித்து தகுதியடையச் செய்தல்.
  • மாணவிகளிடையே ஒழுக்கம், நாகரிகம், பண்பாடு, கலாச்சாரம் போன்றவைகளை வளர்த்து, உரிய வேலை வாய்ப்புகளைப் பெற வழிவகை செய்து உயர்வடையச் செய்தல்.

ஆய்வியல் நிறைஞர் M.Phil TAMIL LITERATURE

  • தமிழ் மொழி இலக்கியம், இலக்கணம் படித்தோரை ஆய்வாளர்களாகப் புதிய பரிமாணம் பெற்று புதிய ஆராய்ச்சியை மேற்கொள்ளச் செய்தல்.
  • சமூகம், பண்பாடு, இலக்கியம், கலாச்சாரம் மற்றும் நடப்பு வாழ்க்கையைப் புரிந்து கொண்டு, அதனைத் திறம்படக் கையாளும் திறன் உடையவராகச் செய்தல்.

 

PROGRAMME SPECIFIC OUTCOME

இளங்கலை தமிழ் இலக்கியம் - BA TAMIL LITERATURE

PSO1: கவிதை, சிறுகதை இலக்கிய வடிவங்களினூடே படைப்பளர்கள் வெளிப்படுத்திய சமூக விழுமியப் பதிவுகளை எடுத்தியம்பி, மேம்பாடுடைய சமூகத்தை  அனைத்துத் தளத்திலும் ஏற்படுத்த ஆற்றுப்படுத்தல்
PSO2: தமிழர்களின் வாழ்வில் சமயம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது மக்களிடையே    அன்பையும் பண்பையும் தன்னம்பிக்கையையும் வளர்ப்பதில் சமயங்களின் பங்கு குறிப்பிடத்தக்கதாகும் சமயங்களின் கொள்கைகளைக் கூறுவன சமய இலக்கியங்களாகும் மாணவிகளுக்கு அக்கொள்கைகளை அறிமுகப்படுத்துவது இப்பாடத்தின் குறிக்கோளாகும்.
PSO3: பண்டைய இலக்கியப் பதிவுகளில் உள்ள பழந்தமிழரின் ஆளுமைகளையும்  அடையாளங்களையும் புலப்படுத்துதல் பக்தி இலக்கியத்தின் வழியாக   உள்ளத்தையும் பண்படுத்துதல்.
PSO4: அறிவியல் தமிழாக்கத்தின் அவசியத்தையும் அதனால் சமகால சமூக  அமைப்பின் அனைத்துத் தரப்பு மக்களும் நுகளும் பயன்பாட்டையும்  எடுத்தியம்புதல்.
PSO5: இளங்கலை படிக்கும் மாணவர்களுக்கு இலக்கியச் சிந்தனையை வளர்க்கும்          நோக்கில் இப்பாடத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது காப்பியம் புராணம் இலக்கணம்  மற்றும் புதினம் எழுதுவதற்கு மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இப்பாடத்திட்டம் உள்ளது.
PSO6: இலக்கிய வகைகளிலும்  சங்க இலக்கியத்திலும் இருக்கும் கற்பனை   நயத்தையும் இலக்கியத்தையும் இலக்கணத்தையும் பரவலாக மாணவர்கள்  அறியும் படி செய்வது.
PSO7: தமிழ் நாட்டின் ஆட்சிமொழியான தமிழை அனைத்துத் துறையிலும்,   நிருவாகத்திலும் முழுமையாகப் பயன்படுத்தச் செய்வது.
PSO8: தமிழ் அற இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள அறக்கருத்துகளைத் தெரிந்து கொண்டு அக்கருத்துகளை வாழ்வின் உயர்வுக்குப் பயன்படுத்த வழிவகுத்தல்.
PSO9: எழுத்து சொல், பொருள் யாப்பு அணி போன்ற தமிழின் மரபிலக்கணங்களை அறிந்து கொள்ளச் செய்தல்.
PSO10: தமிழ் நாட்டின் தொன்மையான தென்னிந்தியத் கோவில் வகைகள், சிற்பம்  போன்றவற்றின் சிறப்பியல்புகளை, சுற்றுலாச் செல்வதன் மூலம் உணரச்  Q செய்தல்.

முதுகலை தமிழ் இலக்கியம் -MA.TAMIL LITERATURE

PSO1: பழந்தமிழ் இலக்கியங்களின் திணை, துறைக்கோட்பாடுகளின் வழி, திணைசார்   சமுதாய வாழ்வின் பல்வேறுபட்ட பரிமாணங்களை புலவர்கள் வாயிலாகவும் திணை இலக்கியத்தின் வாயிலாகவும் அறிதல்.
PSO2: தமிழ்காப்பிய மரவு, காப்பியக்கட்டமைப்பு, பாடுபொருள்களைத் தெளிவுபடுத்தி சமயங்களின் பங்களிப்பை உணரச் செய்தல்.
PSO3: அற இலக்கியங்கள் தோன்றுவதற்கான காரணங்களை உணர்ந்து, காலமாற்றங்களால் விளைந்த அற மாற்றங்களை உணரச் செய்தல்.
PSO4: இலக்கணக் கல்வியின் தேவையை உணர்ந்து, காலந்தோறும் தமிழ் மொழி பெற்ற மாற்றத்தை இலக்கணகல்வியின்  வழி உணரச் செய்தல்.
PSO5: மாணவர்களை படைப்புத் திறனில் ஆர்வம் கொள்ள வழிவகை செய்து, இளம் படைப்பாளிகளை அடையாளப் படுத்துதல்.

ஆய்வியல் நிறைஞர் M.Phil TAMIL LITERATURE

PSO1: பழந்தமிழ் இலக்கியம் முதற் கொண்டு இக்கால இலக்கியங்கள் வரை உள்ளவற்றை, ஆய்வியல் நோக்கில் அணுகுவதற்கான வழிமுறைகளை உணரச் செய்தல்.
PSO2: பண்டைத் தமிழரின் அக, புற வாழ்வியலை மாணவிகள் நுட்பமாக அறியச் செய்தல்.
PSO3: திறனாய்வு அனுகுமுறைகளை விளக்கி திறனாய்வின் வளர்ச்சியையும்  செல்நெறியையும் எடுத்துக் கூறுதல்.
PSO4: ஆய்வுப் பொருளைத் தேர்வு செய்தல், அதற்கான தரவுகளைத் திரட்டுதல்,  வகைப்படுத்துதல் ஆகியவற்றை ஆய்வு நெறியோடு வெளிப்படுத்தும்  முறையினை அறியச் செய்தல்.