முத்தமிழ் விழா 2023-2024
முத்தமிழ் விழா 2023-2024
தமிழ் துறை முத்தமிழ் விழா 20. 03.2024 அன்று காலை 10.00 மணி அளவில் எம். வி. முத்தையா அரசு மகளிர் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பாக முத்தமிழ் விழா நடைபெற்றது. இவ்விழாவில் வரவேற்புரையை இணைப் பேராசிரியர் மற்றும் தமிழ்த் துறை தலைவருமான முனைவர். நாகநந்தினி அவர்களும், சிறப்பு விருந்தினர் அறிமுக உரையை முனைவர். மு. சண்முகப்பிரியா அவர்களும் வழங்கினார்கள். மேலும் சிறப்பு விருந்தினராக முனைவர். ரேவதி சுப்புலட்சுமி, துணை முதல்வர், செந்தமிழ் கல்லூரி, மதுரை அவர்களும் சிறப்புரை ஆற்றினார். மேலும் நிகழ்ச்சிக்கு தலைமை உரையை கல்லூரி முதல்வர் முனைவர். இலா. ரேவதி அம்மா அவர்கள் வழங்கினார்கள் மேலும் நிகழ்ச்சியின் நிறைவாக முனைவர். சோ. தண்டபாணி அவர்கள் நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைவு பெற்றது.